புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2019

வீடு திரும்புவோரை ஊக்குவிக்கும் இலங்கை?

யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களில் 39 குடும்பங்கள் தாயகம் திரும்பவுள்ளனர். எதிர்வரும் 31ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
சுயவிருப்பின் பேரில் 39 குடும்பங்களை கொண்ட 83 இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இதில் 34 ஆண்களும் 49 பெண்களும் உள்ளடங்குவர்.

இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களுக்கு செல்லவுள்ளனர்.
மேலும் இவர்களுக்கு இலவச பயணச்சீட்டு, ஒன்றிணைத்தல் மானிய கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாவும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாவும், போக்குவரத்து கொடுப்பனவாக 2,500 ரூபாவும், உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனிநபருக்கு 5,000 ரூபாவும், குடும்பத்திற்கு 10,000 ரூபாவும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தினால் வழங்கப்படுகின்றது.
அத்தோடு மீள்குடியேற்ற அமைச்சினால் விமான நிலையத்தில் 5,000 ரூபாவும் தற்காலிக கொட்டகைகளுக்காக 25,000 ரூபாவும், உபகரணங்களுக்கு 3,000 ரூபாவும் காணிதுப்பரவு செய்வதற்கு 5,000 ரூபாவும்கொடுப்பனவு செய்யப்படுவதுடன் வாழ்வாதாரத் திட்டங்களிலும் வீட்டுத் திட்டங்களிலும் தெரிவின் போது சிறப்பு புள்ளிகள் வழங்கப்படுகின்றது மேலும் தெரிவித்தார்.

ad

ad