புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2019

ம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹொங் கொங் முதலீட்டாளர் குழுவினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசியுள்ளனர்.

திருகோணமலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது திருகோணமலை உத்தேச அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் திருகோணமலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த சந்திப்பில் கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad