நான் இந்தப் பணியில் இணைந்து இன்றைக்கு ஒரு மாதமாகிறது. கல்வியில் நண்பர்களாக நான் நினைத்திருந்த சிலர், குறைந்தபட்சம் ஒரு எளிய எஸ்எம்எஸ் ஊடாகக்கூட எனக்கு வாழ்த்துக்கூற விரும்பவில்லை.
நகர்புறத்தைச் சேர்ந்த 'றடிக்கல்ஸ்' தொடர்ந்தும் தங்கள் கேலியையும் தனிமனிதத் தாக்குதல்களையும் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனாலும் நான் என் பயணத்தில் தொடர்ந்தும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். ஏனெனில் நேற்றுப்போல், 83 வயதான தாயொருவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நிலத்தை இராணுவத்திடமிருந்து பெற்றர்ர என வடக்கு ஆளுநர் தனது மனவோட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் படையினரது கட்டுப்பாட்டிலிருந்த மேலும் ஒரு தொகுதி நிலங்கள் ஆளுநர் முன்னிலையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.