புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2019

விக்னேஸ்வரன் மீதான மனு நிராகரிப்பு

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்த்து அவரால்; தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.அத்துடன் விசாரணைத் திகதியை குறிக்க 15ம் திகதி வரையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுமுள்ளது.

முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றின் போது நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தவில்லையென தெரிவித்து மீளவும் பா.டெனீஸ்வரனால் மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராக குற்றச்சாட்டை எதிர்த்து அவரால்; தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவையே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமைச்சு பதவியில் தான் நீக்கப்பட்டமைக்கு எதிராக பா.டெனீஸ்வரனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad