புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2019

நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாவாந்துறை, ஐந்துலாம்புச் சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடுதல் நடத்தினார்கள்.

ad

ad