புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2019

காவல்துறைக்கு தகவல் வழங்கிய இஸ்லாமிய இளைஞன் அடித்துக் கொலை!

அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யமொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் பிரதேசத்தில் வடை விற்பனை செய்து வந்தவர் எனவும் காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர்.

தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதிகள் நடவடிக்கைகள் குறித்து பல தகவல்களை பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி வந்துள்ளார்.
எனவே இதை அவர்களே இதை செய்திருக்கலாம் என்ற குண்டத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad