புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2019

உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு?

t உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டி விட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது. ஆனாலும் நியூசிலாந்துக்கே அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகிறது.


அதாவது பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் வங்காளதேசத்தை நாளை சந்திக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தலா 11 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரைஇறுதிக்கு தேர்வாகும். நியூசிலாந்து அணி ரன்ரேட்டில் (+0.175) வலுவாக இருப்பதால் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாகும்.

அதே சமயம் ரன்ரேட்டில் பின்தங்கியுள்ள (-0.792) பாகிஸ்தான் அணி அரைஇறுதியை எட்டவேண்டும் என்றால் வங்காளதேசத்துக்கு எதிராக இமாலய வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது முதலில் பாகிஸ்தான் அணி ஆடி 400 ரன்கள் எடுத்தால் வங்காளதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். 350 ரன்கள் குவித்தால், வங்காளதேசத்தை 38 ரன்னில் சுருட்ட வேண்டும். பாகிஸ்தான் 2-வது பேட்டிங் செய்தால் எந்த பிரயோஜனமும் இருக்காது. எனவே, நியூசிலாந்து அரைஇறுதிக்கு தகுதிபெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்றே சொல்லாம்.

ad

ad