பொதுஜன பெரமுன கட்சிவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தாபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
கோத்தாபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது, ஆனாலும் இந்த முயற்சிகளை நாம் முறியடிப்போம் என அவர் கூறியுள்ளார்.