புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2019

சொந்த தொகுதியை வெல்ல முடியாதவர் நாடு முழுவதும் வெற்றி பெறுவாரா?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் நியமனம் எவ்வாறான சவாலாக அமையும் என்ற கேள்விக்கு எந்த சவாலும் இல்லை இது நாங்கள் எதிர்பார்த்தது தான் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச சஜித் பிரேமதாச போட்டியிட வேண்டும் என்பதே எப்போதும் எனது கருத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் சஜித்தால் வெல்ல முடியாதா என கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரிடம் உங்களிற்கு என்ன பைத்தியமா? தனது திஸ்ஸமகராம அம்பாந்தோட்டை தொகுதிகளிலேயே வெல்ல முடியாத ஒருவரால் எப்படி முழு நாட்டிலும் வெல்ல முடியும் என மகிந்த ராஜபக்ச பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி தனது யானை சின்னத்தையே சஜித் பிரேமதாசவிற்கு வழங்கவில்லை, சரத் பொன்சேகாவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் வழங்கிய அன்னத்தையே வழங்கியுள்ளது எனசுட்டிக்காட்டியுள்ள மகிந்த ராஜபக்ச, அவர்கள் இருவரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை ஆனால் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர். அவரிற்கு யானை சின்னத்தை வழங்கியிருக்க வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.



கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் நீங்கள் பிரதமரா பதவியேற்பீர்களா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad