புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2019

இன்று ஐதேக- கூட்டமைப்பு முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் கோரப்படலாம் என்று அதன் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஏற்கனவே கூட்டமைப்பு உறுப்பினர்களும் சஜித் தரப்பினரும் இரண்டு தடவைகள் கலந்துரையாடிய போதும் ஆதரவு தொடர்பான எந்தவொரு உறுதி மொழிகளும் கூட்டமைப்பிடம் இருந்து சஜித்துக்கு வழங்கப்படவில்லை

ad

ad