"போதிய தெளிவில்லாத நிலையில் கண்டபடி வாய் திறக்க வேண்டாம்- சிவஞானத்திற்கு செக்" என இன்று உதயன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் இன்று தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே சிவஞானம் இதனை தெரிவித்தார்.
மேலும்,
நான் தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர்களில் ஒருவர். என்ன பேச வேண்டுமென்பது எனக்கு தெரியும். கட்சி சார்பில் பேச எனக்கு தகுதியுண்டு. பத்திரிகை செய்திப்படி அப்படியொரு சம்பவமும் நடக்கவில்லை. நேற்று இரவு, நானும் மாவை சேனாதிராசாவும் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதைப்பற்றி எதுவும் பேசவில்லை - என்றார்.