புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2019

எனக்கு செக் வைக்கவில்லை - சிவிகே

இன்றைய உதயன் நாளிதழில் தன்னைப் பற்றி வெளியான செய்தி போலிச் செய்தி என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

"போதிய தெளிவில்லாத நிலையில் கண்டபடி வாய் திறக்க வேண்டாம்- சிவஞானத்திற்கு செக்" என இன்று உதயன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.



இது தொடர்பில் இன்று தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே சிவஞானம் இதனை தெரிவித்தார்.

மேலும்,

நான் தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர்களில் ஒருவர். என்ன பேச வேண்டுமென்பது எனக்கு தெரியும். கட்சி சார்பில் பேச எனக்கு தகுதியுண்டு. பத்திரிகை செய்திப்படி அப்படியொரு சம்பவமும் நடக்கவில்லை. நேற்று இரவு, நானும் மாவை சேனாதிராசாவும் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதைப்பற்றி எதுவும் பேசவில்லை - என்றார்.

ad

ad