புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2019

குடியுரிமையை பெற்றது சட்டபூர்வமானது; கோட்டா தேர்தலில் போட்டியிடலாம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை குடியுரிமையை பெற்றது சட்டபூர்வமற்றதென தீர்ப்பளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. . இதன்மூலம், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவதில் எந்த சட்டரீதியான சிக்கலும் இல்லாமலாகியுள்ளது.

பேராசிரியர் சந்தரகுப்த தேனுவர, காமினி வெயங்கொட ஆகியோர், கோட்டாபயவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

முறையற்ற விதத்தில் அவர் குடியுரிமையை பெற்றதாக அவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். நேற்றும் இன்றும் நடந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, சற்று முன்னர் இந்த தீர்ப்பளிக்கப்பட்டது

ad

ad