புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2020

போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் பாதிக்கப்படும் சாரதி காப்பாளர்களை கவனத்தில் கொள்ளாத இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் செயலிழந்த நிலையில், நாளாந்தம் வருகை தரும் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் இடம்பெறும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்த பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் அமைக்கப்பட வேண்டும் என சாரதிகள் கோரிக்கை விடுத்தனர்.குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாணம் பேருந்து நிலைய சாரதிகள், காப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அன்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அதிக சமூக விரோத செயல்கள் இடம்பெறுவது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.எனவே பேருந்து நிலையத்திற்குள் பொலிஸ் காவலரன் அமைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad