புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2020

பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்

Jaffna Editorபெளத்த பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு  அஞ்சப்போவதில்லை  என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 
முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.



பெளத்த பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    
தேரர்களின் இந்தப் பயமுறுத்தல்களுக்கு எல்லாம் என்னுடைய இனம் கடைசிமட்டும் அஞ்சப்போவதில்லை. தேர்தலில் என்னுடைய இனத்தின் வாக்குகள் எப்படி இருக்கும் என்று கண்டிப்பாக காட்டும்.

“இன்று சமஸ்டி முறையிலான தீர்வைதான் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சொல்லி நிக்கின்றது. இன்று அதனை பிரதமர் கொடுக்கமாட்டேன் என்று சொல்லியுள்ளார்.

பிரபாகரன் கேட்டதைத்தான் கூட்டமைப்பு கேட்கின்றது. பேனாமுனையில் தீர்வைக் கொடுக்கமாட்டோம் என்று சொல்கின்றார்கள். சமஷ்டிமுறை என்றால் தெற்கில் உள்ளவர்கள் எதிராக பார்க்கும் விடயம் ஒற்றையாட்சி என்றால் தமிழர்கள் எதிராக பார்க்கும் விடயம்”.

இனிவரும் காலங்களில், என்னுடைய இனம் வேறு ஒருவரிடம் கையேந்த அனுமதிக்க முடியாது., அதற்கான திட்டங்களை வரையறுத்துள்ளோம். இந்தியாவிடம் எங்களுடைய இந்தத் திட்டங்களைக் கொண்டு, தங்கள் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

கரையோர பகுதிகளில் பாதுகாப்பை இன்றும் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. எங்கள் கரையோர தமிழ் மக்கள் என்பதை இந்தியா உணர வேண்டும். கரையோரப் பகுதி எங்கள் தமிழ் மக்கள்தான் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றார்கள். “இந்தியாவுக்கு ஒரு கடமை இருக்கின்றது. எங்கள் கரையோர பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களைத் தூக்கி நிறுத்துகின்ற பொறுப்பு இருக்கின்றது” என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

ad

ad