ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தகவலறியும் உரிமை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய தடவைகள், ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் ஆகிய விடயங்கள் தவிர்ந்த அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் காணப்படும் ஏனைய அனைத்து விடயங்களையும் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, 20 ஆவது திருத்தத்தின் சட்டமூல வரைவை வர்த்தமானியில் வெளியிடவும் இன்றைய அமைச்சரவை சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது