புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2020

மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகளை குறிவைக்கும் பஸில்

மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவதாக சபதமெடுத்து அதற்கான வியூகங்களை பஸில் ராஜபக்ஷ வகுப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திக் குறிப்பில்:-சிறீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கி குறுகிய கால பகுதிக்குள் மூன்று தேர்தல்களிலும் ஹட்ரிக் சாதனை புரிந்த பஸிலிடமே குறித்த மாகாணசபை தேர்தலை நடத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு தவிர்ந்த 07 மாகாண சபைகளையும் இலகுவில் வென்று விடலாமென கணக்கு போட்டுள்ள பஸில் எப்படியாவது கிழக்கிலும் இம்முறை மொட்டு மலர வேண்டுமென உறுதியாக உள்ளார்.

இதற்காக மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகளை தற்போது அவர் குறி வைத்துள்ளார்.மத்தியில் ஆட்சி அதிகாரம் ராஜபக்ஷக்கள் வசம் இருப்பதால் பஸில் விரித்த வலைக்குள் அவர்கள் இலகுவில் சிக்க கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad