புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2021

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 400 கொரோனாச் சாவுகள்

www.pungudutivuswiss.com
திங்கட்கிழமைகளில் எண்ணிக்கை மிகக் குறைவாகவே பெறப்படும் நிலையில், கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் கொரோனாவால் 400 பேர் சாவடைந்துள்ளனர்.

இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 103.258 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 77.045 (+400 ) ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.211 பேர் சாவடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்திற்குள் 24.465 பேரிற்குக் கொரோனத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனுடன் பிரான்சில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை நெருங்கி 5.498.044 ஆக அதிகரித்துள்ளது.

30.596 பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.000 இனைத் தாண்டி 6.001 ஆக அதிகரித்துள்ளது.

ad

ad