புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வழக்கில் உத்தரவுகளை பிறப்பிக்க தடை

www.pungudutivuswiss.com
கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த பொத்துவில் - பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கில், எவ்வித உத்தரவுகளையும் கட்டளைகளையும் மே 18 வரை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த பொத்துவில் - பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கில், எவ்வித உத்தரவுகளையும் கட்டளைகளையும் மே 18 வரை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸாரால் தொடரப்பட்ட இந்த வழக்குக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரரான அ.நிதான்சன் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது, நீதிமன்ற தடை உத்தரவை மீறியதான வழக்கை, கல்முனை நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாதென மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செய்த மேன்முறையீடு ஏற்கப்பட்டு, மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad