புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2021

எங்கிருந்து பணம் வருகிறது? - கலைவாணியிடம் புலனாய்வுப் பொலிசார் விசாரணை

www.pungudutivuswiss.com
ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவரான கந்தையா கலைவாணியிடம், சீருடை தரிக்காத புலனாய்வு பொலிஸார் நேற்றுக் காலை 10, மணிமுதல் நண்பகல் 12, மணி வரை இரண்டு் மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.


ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவரான கந்தையா கலைவாணியிடம், சீருடை தரிக்காத புலனாய்வு பொலிஸார் நேற்றுக் காலை 10, மணிமுதல் நண்பகல் 12, மணி வரை இரண்டு் மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது எனவும் ,அந்த அமைப்பால் இதுவரை செய்த சமூகசேவைகள் தொடர்பாகவும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை கடந்த பெப்ரவரி 3 தொடக்கம் பெப்ரவரி 7 வரை நடைபெற்ற பேரணிகள் தொடர்பாகவும், அதன் பின்னர் மட்டக்களப்பு மாமாங்கேஷ்வர ஆலயத்தில் மார்ச் மாதம் இடம்பெற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாகவும் ,விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ad

ad