www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், வெகு விரைவில் சந்திப்பிற்கான திகதியை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை எம்.ஏ. சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.