புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2021

ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் விடுவிப்பு

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு வான்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், ஆசிரியர் சங்கங்கள், இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், 8 நாட்களின் பின்னர், முல்லைத்தீவு – கேப்பாப்புலவு வான்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து அவர்கள் இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad