கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.
மங்கள சமரவீரவுக்கு கடந்த 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது. பின்னர் அவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக்கிரியை, இன்று மாலை பொரளை கனத்தை மயானத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இடம்பெற்றுள்ளது.