எனவே, நடத்துனர்களின் உதவி இல்லாமல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி,எதிர்காலத்தில் பேரூந்துகளின் முன் வாசலுக்கு அருகில் தானியங்கி டிக்கெட் அமைப்பு நிறுவப்படும். தானியங்கி மின்னணு டிக்கெட் இயந்திரம் சரி செய்யப்பட்டதும், பயணிகள் தங்களுக்குரிய டிக்கெட்டுகளை தாங்களே பெறலாம். இதன்போது பேருந்துகளின் பின்புற கதவுகள் மூடப்பட்டிருக்கும் மற்றும் பயணிகள் இருக்கை கொள்ளளவுக்கு மட்டுமே ஏற்றிச்செல்லப்படுவார்கள் என்றும் விஜயரட்ன குறிப்பிட்டுள்ளார். |