அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உள்ளூர் இழுவை மடி தொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்துக்கு எதிராகவே குருநகர்,வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கூடியிருந்தவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது டன் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இது தமிழ் கட்சிகளுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல என்றும் இது தனி மனிதனுக்கு எதிரான போராட்டம். பலபேருக்கு வாழ்வளிக்கும் இழுவை மடி தொழிலை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக் கோருவது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எனவும் கருத்து தெரிவித்தனர். குருநகர் மீனவர்கள்தொழிலுக்குச் செல்லாமல் ஹர்த்தால் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. |