புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2021

லண்டனில் இருந்து திரும்பிய மூதாட்டி கிளிநொச்சியில் கொலை

www.pungudutivuswiss.com

இலண்டனில் இருந்து திரும்பிய வயோதிபப் பெண் கிளிநொச்சியில், காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இலண்டனில் தனது மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர், பூநகரி - தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவர், 3 வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பியுள்ளார். கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக, அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.

தனியாக வசித்து வந்திருந்த நிலையில், நேற்று வங்கிக்கு சென்று திரும்பியுள்ளார். பிற்பகல் 3 மணி முதல் 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார். குறித்த வயோதிப பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம், நேற்று இரவு 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.குறித்த வீட்டின் உள்ளே, இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

குறித்த வயோதிபப் பெண் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர், நேற்று கைது செய்யப்பட்டு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை, சடலம் இருக்கும் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு, சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கந்தபுரம் - பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில், குறித்த வயோதிபப் பெண்ணின் சடலம் வீசப்பட்டுள்ளது.

இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து, சடலத்தை வீசியுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad