புளியங்குளம் ஸ்ரீ முத்துக்குமார நகரப் பகுதியில் சுமார் 7 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் போது, அவருக்கு கஞ்சாவை வழங்கியதாகக் கூறப்படும் ஓமந்தை காவல்நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். |