புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2022

திருமணம் செய்து கொண்டு திரும்பிய யாழ்ப்பாண தமிழருக்கு கனடாவில் நேர்ந்த கதி!

www.pungudutivuswiss.com


35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்

மிசிசாகா நகரில் கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி, இடம்பெற்ற விபத்தில் 35 வயதுடைய சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் மரணமடைந்தார்.

மார்க்கம் நகரை சேர்ந்த இவர் வீதியை கடந்து தனது வாகனத்திற்கு சென்ற போது வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு,படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, டிசெம்பர் 24ஆம் திகதி மரணமானார்.

அவரை மோதிய வாகனத்தின் சாரதி, அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். மோதிய வாகனத்தின் சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான தகவல், சிசிரிவி அல்லது வேறேதும் காணொளி பதிவுகள் இருப்பவர்கள், பொலிஸ் அல்லது குற்றத் தடுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சுரேஸ் தர்மகுலசிங்கம் நுணாவில் மேற்கை சொந்த இடமாக கொண்டவர். 2010ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்த அவர், லொறி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், இலங்கைக்குச் சென்று திருமணம் செய்து கொண்ட சுரேஸ் தர்மகுலசிங்கம், டிசெம்பர் 11ஆம் திகதி கனடாவுக்குத் திரும்பிய நிலையில், சில நாட்களில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ad

ad