புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2022

மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்! - ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு.

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

குறித்த வழக்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம் பெற்ற நிலையில், ஆசிரியர் வரும் 21.07.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெறவும், ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த வழக்கு

குறித்த ஆசிரியர் தொடர்பில் காவல்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவிகள் சிலர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, இரண்டு புதிய வழக்குகள் கடந்த 30.06.2022 அன்று நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஸ்பியோகம் செய்த குற்றச்சாட்டு காவல்துறையிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி பாலியல் துஸ்பியோகத்துக்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காவல்துறையினரால் பாலியல் துஸ்பியோக குற்றச்சாட்டில் தொடரப்பட்ட B/685/22 வழக்கு மற்றும் குறித்த ஆசிரியர் 13 வயது பதினோரு மாதங்களை உடைய மாணவி ஒருவரை பாலியல் துஸ்பியோகம் செய்த குற்றச்சாட்டு காவல்துறையினரிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி பாலியல் துஸ்பியோகத்துக்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காவல்துறையால் பாலியல் துஸ்பியோக குற்றச்சாட்டு, சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் தொடரப்பட்ட B/686/22 வழக்கு ஆகியன நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தனர்.

இதன் போது நீதிபதி ஆசிரியரை 21.07.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஆசிரியரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெறவும் ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

ad

ad