புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2022

இலங்கைக்கு கோடிக்கணக்கில் பெறுமதியான தங்கம் கொண்டு வந்த தம்பதியினர் கைது! [Wednesday 2022-08-10 08:00]

www.pungudutivuswiss.com

சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த தம்பதியரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினர் இன்று (9) மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய திருமணமான தம்பதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த தம்பதியரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினர் இன்று (9) மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய திருமணமான தம்பதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இருவரும் இன்று (9) பிற்பகல் 02.30 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து ஓமன் எயார் நிறுவனத்தின் WY-373 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு இடையில் இந்த நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ad

ad