புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2022

டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் ரத்து

www.pungudutivuswiss.com
இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோத இருந்தன . மெல்போர்னில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது .ஒரு பந்து கூட வீசாமல் இந்த போட்டி கைவிடப்பட்டது.இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று மெல்போர்னில் . ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது .

ad

ad