புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2022

புதிய அணியுடன் ஆண்டுக்கு 175 மில்லியன் ஒப்பந்தம்! பரபரப்பான சூழலில் கையெழுத்திட்ட ரொனால்டோ

www.pungudutivuswiss.com
சவூதி அரேபியாவின் அல்-நஸர் அணியுடனான ஒப்பந்தத்தில் 

கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.

மான்செஸ்டரில் இருந்து வெளியேற்றம்

போர்த்துக்கல்லின் நடச்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இலவச முகவராக இருந்தார்.

பியர்ஸ் மோர்கனுடனான சர்ச்சைக்குரிய நேர்காணலுக்கு பின்னர் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரை பல கிளப் அணிகள் ஒப்பந்தம் செய்ய போட்டியிட்டன. எனினும் சவூதி அரேபியாவின் கிளப் அணி அவரை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.

கிறிஸ்டியானோ ரொனால்டோ/Cristiano Ronaldo

புதிய ஒப்பந்தம்

இந்த நிலையில் சவூதியின் கிளப் அணியான அல்-நஸர் அணியின் ஒப்பந்தத்தில் ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளார் என சவூதி அரேபியாவின் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி ரொனால்டோ ஆண்டுக்கு 175 மில்லியன் பவுண்ட் பெறுவார். ஏழு ஆண்டுகள் அந்த அணியில் அவர் விளையாடுவார் என தெரிகிறது.     

கிறிஸ்டியானோ ரொனால்டோ/Cristiano Ronaldo

@Getty Images

ad

ad