புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268- பேருக்கு கொரோனா

www.pungudutivuswiss.com
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் பிஎப்7 வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறத்தொடங்கியுள்ளது. தினசரி பதிப்பு 200 க்கும் கீழாக பதிவாக வந்த கொரோனா பாதிப்பு இந்த வர தொடக்கத்தில் மீண்டும் 200 ஐ தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3552- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது.

ad

ad