பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரான 38 வயதுடைய நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்மறியல் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன்,உத்தரவிட்டார். மனைவி இல்லாத நேரம் குறித்த நபர் தனது மூன்று வயது மகளின் பெண்ணுறுப்புக்குள் விரலை நுழைத்து தனது இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார். பெண்ணுறுப்பில் காயம் ஏற்பட்டதை அவதானித்த தாயார் இது தொடர்பில் பருத்துத்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த சந்தேகநபருக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் இருக்கின்றனமை குறிப்பிடத்தக்கது. |