புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2023

முன்னணியின் செயற்பாட்டாளர் சற்குணதேவிக்கு விளக்கமறியல்!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை,  எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை, எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வடமராட்சி கிழக்கு தளையடி பொது விளையாட்டரங்கில் 03/06/2023 அன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவினர்.

அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்கப்பட்டபோது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டை முன்வைத்து மருதங்கேணி பொலிஸாரால் சற்குணதேவி ஜெகதீஸ்வரன் திங்கட்கிழமை காலை செய்யப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மருதங்கேணி பொலிஸ் அதிகாரிகள் உட்பட்ட 10 க்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபருக்கு பிணை வழங்க வேண்டாம் என்று நீதிமன்றத்திடம் கோரிநின்றனர்.

அக்கோரிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது

ad

ad