புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2023

மாணவிகள் துஷ்பிரயோகம் - யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் கைது!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இலவச வகுப்பு நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இலவச வகுப்பு நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , புதன்கிழமை தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர்.

குறிப்பிட்ட கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்ததை அடுத்து குறித்த சந்​தேக நபரை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.

ad

ad