இந்தோனேஷியா, எகிப்து, மெக்சிகோ, சிலி மற்றும் சாம்பியா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் குறித்த இரு தினங்களில் சவூதி அரேபியாவில் நடக்கவிருக்கின்ற இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் உக்ரைனுக்கு நன்மை பயக்கக்கூடியதாகவும் மேலும் அமைதியான ஒரு நிலைமையை உறுதிப்படுத்த சர்வதேச ஆதரவை பெற்றுத் தரும் எனவும் எதிர்பார்ப்பதாக சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும் ஜூன் மாதம் கோபன்ஹேகனில் நடந்த ஒப்பீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது . அதேவேளை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சல்லிவன் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தத்தமது பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது |