உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. அதேவேளை, கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த ஒருவரும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இதனால், பலிக்கு பழிவாங்கும் நோக்குடன் இந்த கொலைகள் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது |