கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குறித்த பெண் செவ்வாய்க்கிழமை பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு, இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டது. அத்துடன், பெண்ணின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இவை மருத்துவ தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து, அந்த பெண்ணின் கணவரான இராதுரை சுரேஸ் என்பவர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |