யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சநத்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடிதத்தினை உடனடியாக அனுப்புவதா? இல்லையா? என்பது குறித்து இன்று வெள்ளிக்கிழமை நாங்கள் மீளவும் கூடியே தீர்மானம் எடுக்கவுள்ளோம். இன்று சில கட்சி தலைவர்கள் வருகைதராமையின் காரணமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை. 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவிற்கு காணப்படுகின்றது. தற்பொழுது நாட்டின் நிலை குறித்தும்,தமிழ் மக்களது நிலை குறித்தும் 13 இனை அமுல்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் அவருடன் பேச நாம் விருப்பமாக இருக்கின்றோம். தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி ,ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம். கட்சி தலைவர்கள் அனைவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற பொழுதுதான் இது முழுமையான செயல்வடிவம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார். |