அதிகாலை 4 மணிக்குப் பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக வின்னிபெக் பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், சுடப்பட்ட காயங்களுடன் ஐந்து பேரைக் கண்டறிந்தனர். ஒரு ஆணும் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் பின்னர் காயங்களால் இறந்தார். பாதிக்கப்பட்டவர்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர் |