கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன்று காலை மரணமானார். சுகயீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் மரணமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஜீத்தின் புதல்வர் ஆவார். , இவர் கூட்டுறவுத் துறை பிரதியமைச்சர்,நாடாளுமன்ற உறுப்பினர் என பல அரச உயர் பதவிகளில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது