சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்
ஹியூமன் இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை இறக்குமதி செய்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சந்திரகுப்த இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.