புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2024

பெலியத்த படுகொலைகள் - முக்கிய சூத்திரதாரி கைது

www.pungudutivuswiss.com

பெலியத்தவில் திங்கட்கிழமை ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய  நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்  அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெலியத்தவில் திங்கட்கிழமை ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் மேற்பார்வையில் ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சமன் குமார என்ற 54 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்திற்காக வந்த 65-2615 இலக்கம் கொண்ட மிட்சுபிஷி பெஜேரோ ஜீப்பையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என அமைச்சு தெரிவித்துள்ளது.

குற்றத்தை புரிவதற்காக வந்தவர், வாகனத்தை செலுத்தி வந்துள்ளார் என மேலும் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ad

ad