புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2024

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலி! Top News

www.pungudutivuswiss.com
 கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

அமைச்சர் பயணித்த பிரமுகர் வாகனம் இன்று அதிகாலை 2 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கொள்கலன் வண்டியுடன் மோதியதாக அவர்கள் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர், இராஜாங்க அமைச்சர் உட்பட மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்க்காவலர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சனத் நிஷாந்த மகிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசி என்பதும், அவருக்கு மிகநெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad