அமைச்சர் பயணித்த பிரமுகர் வாகனம் இன்று அதிகாலை 2 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கொள்கலன் வண்டியுடன் மோதியதாக அவர்கள் தெரிவித்தனர். விபத்தின் பின்னர், இராஜாங்க அமைச்சர் உட்பட மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்க்காவலர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சனத் நிஷாந்த மகிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசி என்பதும், அவருக்கு மிகநெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. |