நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்தார். சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஊசியை கொள்வனவு வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, இன்று காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து சிஐடியில் முன்னிலையான அவரிடம், 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்டார். |