புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2024

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்! [Friday 2024-12-06 17:00]

www.pungudutivuswiss.com


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது.


நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை காரணமாக சாத்தியமாகியுள்ள ஏதேச்சதிகார ஆட்சியானது ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டமானது இலங்கையில் உள்ள பயங்கரவாதஎதிர்ப்பு கட்டமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது,மேலும் சட்டபூர்வமான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் தனிநபர்கள் குழுக்கள் நிறுவனங்களிற்கு எதிராக இதனை பயன்படுத்தியுள்ளனர் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரஜைகளிற்கு சாதாரணமாக வழங்கப்படவேண்டிய மனித உரிமை பாதுகாப்புகளை முழுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கொடுரமான விதிமுறைகளிற்காக பெயர்போயுள்ளது இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டிணைவு,பயங்கரவாதம் பற்றிய தெளிவற்ற மற்றும் பரந்துபட்ட வரையறையின் அடிப்படையில் கைது செய்வதற்கான காவலில் வைப்பதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறான அதிகாரங்கள் நீதிஆய்விற்கு உட்படுத்தப்படுவதில்லை,மேலும் இது பரந்துபட்ட அசாதாரண ஜனாதிபதி அதிகாரங்களையும் வழங்குகின்றது என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது மனித உரிமைகளிற்கு மாத்திரமின்றி நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கும் அவசியமானது என தெரிவித்துள்ளது.

ad

ad