புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2025

தீர்வுத் திட்டம் குறித்து 25 ஆம் திகதி முக்கிய கலந்துரையாடல்! [Wednesday 2025-01-08 05:00]

www.pungudutivuswiss.com


புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (07) நண்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றக்கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து ஆராயப்பட்டதுடன், அதுபற்றி தமிழ்த்தேசிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கான திகதியொன்றை நிர்ணயிப்பது குறித்தும் பேசப்பட்டது.

அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து, இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தீரமானிக்கப்பட்டது. இச்சந்திப்பை எங்கு நடாத்துவது என வெகுவிரைவில் தீர்மானித்து அறிவிக்கப்படும்.

அதன்படி 25 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில் மேற்குறிப்பிட்ட மூன்று கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்கேற்கவிருப்பதுடன், தமிழர்களுக்கு ஏற்றவாறான தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் எந்தெந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை அந்தந்தக் கட்சிகளே தீர்மானிப்பதற்கு இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டது.

ad

ad