புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2025

யாழில். போலி தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த கனேடியன் பிரஜை கைது

www.pungudutivuswiss.com

போலி சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில்
கனேடிய பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட காலமாக கனடாவில் பிரஜாவுரிமை பெற்று வசித்து வரும் நிலையில் , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த போது நபர் ஒருவரின் உதவியுடன் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுள்ளார்.

பின்னர் கனடா சென்று, மீண்டும் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று தன்னுடைய தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க முயன்ற வேளை அது போலியான அனுமதி பத்திரம் என அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, போலி அனுமதி பத்திரத்தை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ad

ad