ராஜபக்சே வருகையை எதிர்த்து ரயில் மறியல் (படங்கள்)
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் தமிழ்நாதன், பெரியரசு ஆகியோர் தலைமையில் திருச்சி ரயில்வே ஜென்ஷனில் உள்ள 3வது பிளாட் பாரத்தில் ரயில் மறிய-ல் ஈடுபட்டனர். ரயில் மறிய-ல் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.-
21 செப்., 2012
ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் சற்றுமுன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு ஐ.நா. தலைமையக காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு வலையத்திற்குள் இருக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக மறுபடி குடியேற முடியாமை காரணமாக வலிகாமம் மற்றும் சாம்பூர் பகுதிகளின் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள்,
.மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை நீதிமன்றத்தின் மேல் ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்
லங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய போத்தலுடன் ஏறி நின்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்
லங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய போத்தலுடன் ஏறி நின்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை சிறுபான்மையினருக்கு விடுக்கப்படும் சவால்: துரைரெட்ணம்
கிழக்கு மாகாண சபையில் புதிதாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்
மத்திய பிரதேச எல்லையில் வைகோ இரவிரவாக தரையில் அமர்ந்து போராட்டம்! சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்கிறது!
[ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 06:18.03 AM GMT ]
மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் புத்த மற்றும் இந்திய அறிவுசார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ள ராஜபக்ச நேற்று டெல்லி வந்துவிட்டார்.
இந்நிலையில், ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் சாஞ்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.
இதற்காக, அவர் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 17-ம் தேதி சென்னையில் இருந்து 21 பஸ்களில் சாஞ்சி புறப்பட்டுச் சென்றார்.
நேற்று வைகோவும், அவருடன் சென்ற 750 தொண்டர்களும் மத்திய பிரதேச எல்லையான பட்சிரோலி நகரை சென்றடைந்தனர்.
ஆனால் பாதுகாப்பு கருதி அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2000 க்கும் அதிகமான பொலிஸார் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள்.
நாங்கள் இந்திய குடிமக்களா இல்லையா? எங்களை தடுத்து நிறுத்திவிட்டு கொலைகாரன் ராஜபக்சவை வரவேற்கிறீர்களா..? என்று கோசத்துடன் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ, நடுரோட்டில் அமர்ந்தபடியே தனது போராட்டத்தை இரவு முழுவதும் தொடர்ந்தார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வைகோவின் போராட்டத்துக்கு பட்சிரோலி பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இரண்டாம் இணைப்பு
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடுரோட்டில் தூங்கி, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராடும் வைகோ!
ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநில எல்லையில் நடுரோட்டில் அமர்ந்து வைகோ போராட்டம் மேற்கொண்டுள்ளார். விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ, தற்போது சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய தொடக்க விழாவில் பங்கேற்க டில்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.
இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
20 செப்., 2012
மஹிந்தவின் வருகையை எதிர்த்து தமிழகத்தில் ரயில் மறியல்! 2000 க்கு மேற்பட்டோர் கைது!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சிகள் இன்று பரவலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)