-
20 செப்., 2013
சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சனீஸ்வர வழிபாடு
(புரட்டாதி சனி நாட்கள் )
சுவிட்சர்லாந்து தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 21.28 மற்றும் ஒக்ரோபர் 5,12 ஆகிய தினங்களில் இவ்வாலயத்தில் சனீஸ்வர வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பாதால் அடியார்கள் சனீஸ்வரனை வேண்டி விரதம் இருந்து சனீஷ்வர தோஷ வழிபாடு செய்து உங்கள் வாழ்வை நலமாக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
சனீஸ்வர பகவானுக்கு உகந்த தினங்கள் இவை என்பதால் அடியார்கள் அவருக்கு எள்ளெண்ணை தீபம் ஏற்றி கரு நீல (குவளை) மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவார்கள்
சனீஸ்வர தோஷம் உள்ளவர்கள் -ராசிகள்-நட்சத்திரங்கள்
ஏழரை சனி
கன்னி ராசி (உத்தரம் 2.3.4 ஆம் கால்கள் ,அத்தம் -சித்திரை 1.2 ஆம் கால்கள் )
துலாம் ராசி (சித்திரை 1.2 ஆம் கால்கள் ,சுவாதி ,விசாகம் 1.2 ,3ஆம் கால்கள் )
விருச்சிகம் (விசாகம் 4 ஆம் கால் ,அனுஷம் ,கேட்டை )
அட்டமத்து சனி
மீன ராசி (பூரட்டாதி 4 ஆம் கால் .,உத்தரட்டாதி, ரேவதி )
7 ஆம் இடத்து சனி
மேட ராசி (அஷ்வினி, பரணி. கார்த்திகை 1 ஆம் கால் )
4 ஆம் இடத்து சனி
கடக ராசி ( புனர்பூசம் 4 ஆம் கால், பூசம் ,ஆயிலியம் )
(புரட்டாதி சனி நாட்கள் )
சுவிட்சர்லாந்து தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 21.28 மற்றும் ஒக்ரோபர் 5,12 ஆகிய தினங்களில் இவ்வாலயத்தில் சனீஸ்வர வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பாதால் அடியார்கள் சனீஸ்வரனை வேண்டி விரதம் இருந்து சனீஷ்வர தோஷ வழிபாடு செய்து உங்கள் வாழ்வை நலமாக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
சனீஸ்வர பகவானுக்கு உகந்த தினங்கள் இவை என்பதால் அடியார்கள் அவருக்கு எள்ளெண்ணை தீபம் ஏற்றி கரு நீல (குவளை) மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவார்கள்
சனீஸ்வர தோஷம் உள்ளவர்கள் -ராசிகள்-நட்சத்திரங்கள்
ஏழரை சனி
கன்னி ராசி (உத்தரம் 2.3.4 ஆம் கால்கள் ,அத்தம் -சித்திரை 1.2 ஆம் கால்கள் )
துலாம் ராசி (சித்திரை 1.2 ஆம் கால்கள் ,சுவாதி ,விசாகம் 1.2 ,3ஆம் கால்கள் )
விருச்சிகம் (விசாகம் 4 ஆம் கால் ,அனுஷம் ,கேட்டை )
அட்டமத்து சனி
மீன ராசி (பூரட்டாதி 4 ஆம் கால் .,உத்தரட்டாதி, ரேவதி )
7 ஆம் இடத்து சனி
மேட ராசி (அஷ்வினி, பரணி. கார்த்திகை 1 ஆம் கால் )
4 ஆம் இடத்து சனி
கடக ராசி ( புனர்பூசம் 4 ஆம் கால், பூசம் ,ஆயிலியம் )
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்!- அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள்!
மாகாணசபை எமக்குரிய தீர்வல்ல என்றபோதும், திணிக்கப்பட்ட தேர்தல் என்ற போதும், தவிர்க்கவியலாமல் வரலாறு எம்மீது சுமத்திவிட்ட பணியை ஏற்று, தமிழ்த் தேசியப் போராட்டம் வீழ்ந்து விடவில்லையென்பதை உலகுக்குப் பறைசாற்ற சரியானவர்களை வெல்ல வைத்து தமது தேசியக் கடமையைச் செய்ய முன்வருமாறு அனைத்துத் தாயக உறவுகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
19/09/ 2013.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
19/09/ 2013.
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்
அன்பான தமிழ்பேசும் மக்களே!
எம்மினம் தாங்கொணா சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்து பாரிய அழுத்தங்களை எம்மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் அண்மையில் எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட ஓர் அழுத்தமே இந்த வடமாகாணசபைத் தேர்தல்.
மாகாணசபை முறைமை ஒருபோதும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, அரசியல் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட அமையாது என்பதில் தமிழ்த்தேசியத்தில் ஆழமான பற்றுக்கொண்டோர் அனைவரும் தெளிவாகவே உள்ளனர். இருந்தபோதும் எமது மக்கள் விரும்பாத ஒரு தேர்தல் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்குமுதவாத ஓர் அரைகுறைத் தீர்வுமுறையான மாகாணசபையைக் கைப்பற்றுவதன்மூலம் தமிழரின் உரிமைப் போராட்டத்தில் பெரிதாக எதையும் பெற்றுவிடப் போவதில்லை. ஆனாலும் திணிக்கப்பட்ட தேர்தலை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் எமது தமிழினம் உள்ளது.
இத்தேர்தல் முடிவு தமிழரின் உரிமைப் போராட்டத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது என்ற கண்ணோட்டத்தில் தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் இருக்கின்றபோது நிலைமை படிப்படியாக மாற்றமடைந்து வருவதை உணர முடிகின்றது. இத்தேர்தல் பெறுபேறுகள் தமக்குச் சாதகமாக வருமிடத்து, தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்மக்கள் தூக்கியெறிந்து விட்டார்கள் என்ற பரப்புரையை முடுக்கிவிட அரசு தீவிரமாக முயல்கின்றது. எப்பாடுபட்டாவது தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவான சக்திகளைத் தோற்கடித்து தனது பரப்புரையை உலகமட்டத்தில் விரிவாக்குவதற்கு அரசு கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் நிற்கின்றது. அதற்காக முடிந்தவரை முயன்றுகொண்டுள்ளது.
இந்தத் தருணத்தில் தமிழ்மக்கள் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டியது வரலாற்றுக்கடமை. எமது விருப்பமின்றி எம்மீது திணிக்கப்பட்ட இத்தேர்தலைச் சரியான முறையில் எதிர்கொண்டு எதிரியின் கபட நோக்கத்தை முறியடிக்க வேண்டிய கடப்பாடு தமிழர் எல்லோருக்குமுள்ளது.
எமது இனம் விரும்பாத வகையில் எம்மீது ஆயுத வன்முறை திணிக்கப்பட்டபோது தவிர்க்க முடியாமலேயே நாமும் ஆயுதமேந்திப் போராடினோம். இன்று சிறிலங்கா அரசானது எம்மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு புதியமுறையில் அரசியல் பொறிகளை வைத்து வருகின்றது. இதிலொன்றுதான் இந்த மாகாணசபைத் தேர்தல். இதையும் தேர்தல் வழியிலேயே முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் எமது மக்கள் இருக்கின்றார்கள்.
எனவே, மாகாணசபை எமக்குரிய தீர்வல்ல என்றபோதும், எமது விருப்பின்றி திணிக்கப்பட்ட தேர்தல் என்றபோதும், தவிர்க்கவியலாமல் வரலாறு எம்மீது சுமத்திவிட்ட பணியை ஏற்று, தமிழ்த்தேசியப் போராட்டம் வீழ்ந்து விடவில்லையென்பதை உலகுக்குப் பறைசாற்ற சரியானவர்களை வெல்லவைத்து தமது தேசியக் கடமையைச் செய்ய முன்வருமாறு அனைத்துத் தாயக உறவுகளையும் கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை, மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாயிருந்து தாயகக்கோட்பாட்டில் உறுதியாக நின்று பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்பான மக்களே!
“போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்ட இலட்சியம் என்றும் மாறாது’ என்ற எமது தேசியத் தலைவரின் எண்ணத்துக்கமைய இன்றைய காலச்சூழலில் எமது அமைப்பானது உலக ஒழுங்கிற்கு ஒத்திசைவான ஒரு போராட்டப் பயணத்தை மேற்கொள்கின்றது. அந்த வகையில் எமது அமைப்பின் அரசியல்துறையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கான பணியை புதிய புறச்சூழலுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லும்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று முழங்கிய தியாகி திலீபனின் நினைவு நாட்களில் நடைபெறும் இந்த மாகாணசபைத் தேர்தல் பொறியை மக்களின் துணையுடன் வென்றெடுப்போம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ம.அன்புமாறன்,
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றி! தமிழர் பிரச்சினை சர்வதேசத்தை நோக்கி வேகமாக செல்லும்: அரசியல் விமர்சகர்கள்
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் எதிகாலம் பற்றிய எதிர்வுகூறலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனந்தி மீதான தாக்குதலை இராணுவமே மேற்கொண்டது!- கபேயின் தேசிய அமைப்பாளர் அதிர்ச்சித் தகவல்
தாக்குதலுக்குள்ளான திருமதி அனந்தியின் வீட்டிற்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
சிறிலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் மன் மதலீலைகள் அம்பலம்.
2009ம் ஆண்டிற்குப்பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தங்களின் சுயநலத்துக்காவும்,சலுகைகளுக்காகவும் அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராகவும்,தமிழ்த்தேசியக்கூட்டமைபுக்கு எதிராகவும் அறிக்கை விடுவதும் ஐ.நா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் ஆட்களைச்சேர்த்து ஐ.நாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச்
தம்புள்ளை அம்மன் கோவிலிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும்!- இனாமலுவ தேரர்
தம்புள்ளை அம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தில் குளம் ஒன்று நிர்மாணிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தம்புள்ளை விகாராதிபதி இனாமலுவ தேரரினால் அப்பகுதியிலுள்ள மக்கள் இன்று வெள்ளிக்கிழமை அங்கிருந்து வெளியேற வேண்டுமென காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் நிறுத்திய வேட்பாளர்களுடன் ஹத்துருசிங்க வல்லிபுரக் கோயிலில் வழிபாடு!- ஆதாரப் புகைப்படங்கள் கசிந்தன
வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கட்சியில் இராணுவத்தினரால் சில வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனந்தி வீட்டில் நடந்த தாக்குதலுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை!- இராணுவப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனந்தி (எழிலன்) சசிதரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)